Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் மீண்டும் பிரதமர் மோடியின் வருகிறார் அண்ணாமலை அறிவிப்பு

மார்ச் 30, 2024 01:27

சென்னை,மார்ச்.30:நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூரில் பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார.இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல விரும்புகின்றேன். உங்களைப் பார்ப்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் சென்னை வருவார், வந்து கொண்டிருக்கிறார். சென்னையில் "ரோட் ஷோ" நடக்கும். நீங்களும் அருகில் இருந்து மோடியை பார்க்கலாம்‌. எனவே தமிழிசை சௌந்தரராஜன் அவர்களது வெற்றியை உறுதிப்படுத்துங்கள் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்